Skip to main content

ஒரு வழிப்போக்கனின் கவிதை

 தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் .....

வாய்க்கு வந்தததை உளறியபடி ......
சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் ....
இருந்த "அரசடிப்பிள்ளையாரை"....
வாயில் வந்ததையேல்லாம் .....
தொகுத்து கவிதையாக்கினான் .....!!!

&
பார்க்கும் இடமெல்லாம் .....
இருக்கும் தெருவெல்லாம் ......
ஆற்றங்கரையெல்லாம்  .......
வீற்றிருக்கும் பிள்ளையாரே ......
என்போன்ற வழிப்போக்கனுக்கு .....
பக்தியை அள்ளிவழங்க உம்மை ....
விட்டால் யார் உள்ளனரோ .....?

மிருகம் பாதி மனிதன் பாதி ....
கலந்திருக்கும் கடவுள் நீர் .......
அதனால் தானோ எல்லா ....
உயிரினங்களும் உம்மில் ......
இத்தனை அன்போ .....?

உம் வயிறும் நிரம்ம போவதில்லை .....
என் போன்ற வழிப்போக்கனின் .....
வயிறும் நிரம்ம போவத்தில்லை .....
பணம் படைத்தவன் வயிறும் ....
மனமும் நன்றாக நிரம்புகிறது .....
அவர்கள் பார்த்து நமக்கு ....
படைத்தால் தான் நம் வயிறு ......
நிரம்ப முடியும் ..........!!!

அதுசரி உமக்கும் புத்தனுக்கும் .....
அப்படியென்ன அரசமரத்தில் ....
காதல் - எங்கெல்லாம் அரசு 
முளைக்கிறதோ அங்கெல்லாம் ....
இருவரும் அரசை பிடிப்பதுபோல் ....
அரச மரத்தை பிடிக்கிறீர்கள் .....
அரசை பிடிப்பதில் அப்படியொரு ....
கடும் போட்டி உங்களுக்குள் .......!!!

போகிற போக்கில் அரசமரத்துக்கு ....
நீங்கள் போராட மக்களை தூண்ட ....
போகிறீர்கள் - போதுமையா....
நாங்கள் போராடிய போராட்டம் .....
நீங்கள் இருவரும் தொகுதி உடன் ...
பாட்டுக்கு வாருங்கள் ....
அரசடி பிள்ளையார் நீங்கள் ....
வடக்கு பக்கத்தையும் கிழக்கு ....
பக்கத்தையும் பார்த்து இருங்கள் ....
புத்தன் மற்ற திசைகளில் அமரட்டும் ......!!!

சற்று களைப்பாறிய வழிப்போக்கன் .....
தோள் துண்டை தலையில் போட்டபடி ....
அரசிடமிருந்து விடைபெற்றான் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 01
கவிப்புயல் இனியவன்
விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!
------

தின பத்திரிகையை வாசித்து ....
உலக நடப்பை விவாதித்து ....
கொண்டிருந்த இருவரை பார்த்து ....
தோளில் இருந்த துணியால் ....
வாயை பொத்திய படி சிரித்த ....
வழிப்போக்கன் ........!!!

பேசத்தொடங்கினான் ....!!!

விசித்திர உலகமையா ......
உண்மை உலகை ஒருமுறைசுற்றி.....
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி .....
வந்து விடுகிறது - இதுதான் இன்றைய .....
உண்மையின் இன்றைய நிலை ....!!!

இதனால் தான் .....
தீர்ப்புக்களும் தீர்வுகளும் .....
காலம் கடந்தே போய்விடுகிறது .....
உண்மையை நிரூபிக்க முன் ....
பொய் உண்மையை கொஞ்சம் ....
கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!!

உலகை ஏமாறுவதர்காக .....
இன்றைய சட்டங்களும் விதிகளும் .....
உண்மையும் பொய்யும் கலந்த ....
சட்டத்தில் இயங்கி வருகின்றன ......
எல்லோருக்கும் நல்லவனாக .....
சட்டம் வேஷம் போடுகிறது ......!!!

உலகில் ஒருபக்கம் அழிவு .....
மறுபக்கம் ஆனந்த கூத்து ......
இதற்கெல்லாம் காரணம் ......
சட்டம் "உண்மை பாதி" .....
" பொய் பாதி" ஆக இருப்பதே .....
வேதனை என்வென்றால் .....
உண்மையை  நியாயப்படுத்த ....
முன்னர் பொய் அதனை .....
முழுமையாக தின்றுவிடும் .....!!!

இதுதான் இன்று ஈழத்தின் .....
உலக போக்காகும் ....
தனக்குள் முணு முணுத்த ...
படி சென்றான் வழிப்போக்கன் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 02
கவிப்புயல் இனியவன்Reply
Reply

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்