Skip to main content

பொங்கல் கவிதை

 தை - திருமகளே வருக வருக ....

தைரியம்  சிறக்க வருக வருக ....
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!

முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி அழைக்கிறேன் 
தை- திருமகளே வருக வருக ....!!!

உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே .... 
தை- திருமகளே வருக வருக ....!!!

^
பொங்கல் கவிதை
கவிப்புயல் இனியவன்
2018 . 01 .14
கவிப்புயல் இனியவன்
பொங்கல் லிமரைக்கூ
-----------

அறுவடையின் இன்பம் பொங்கல் 
கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம் 
நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல் 

^^^

முக்கல் வைத்து பொங்கல் 
ஊதி ஊதி இழைத்து உடம்பு 
பச்சை விறகால் சிக்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் லிமரைக்கூ

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்