Skip to main content

விழிப்புணர்வு கவிதை 05

 சமூக தளங்கள் ........

சமூகத்தை சீர் படுத்தும் ......
தளங்களாக இருக்கவேண்டும் .....
சீரழிக்கும் தளங்களாக.......
மாறிவிடக் கூடாது ......!!!

இராணுவ  புரட்சி மூலம்.....
ஆட்சியை மாற்ற இருந்தவர்களை.....
சமூகதள தகவல் மூலம் மக்கள்.....
புரட்சி வெடித்து இராணுவ புரட்சி.....
தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள.....
செய்தி பரிமாற்றம் உதவியதை.....
யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!!

தலைவன் இல்லாமல் தம் இன.....
பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்.....
போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு......
போராட்டம் சமூக தள பரிமாற்றம்.....
உலகையே திரும்பி பார்க்கவைத்து......
உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை.....
படைத்தது சமூக தள ஆயுதம்........!!!

மறுபுறத்தில் வேதனையான .......
சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்.........
நடைபெற்றுகொண்டிருப்பதும் ........
மறுப்பதற்கில்லை.........
தனிப்பட்ட பகைமைக்கும்.........
விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்......
பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!!

எங்கோ நடைபெற்ற நிகழ்வை.......
திரித்து கூறுதல் பொருத்தமற்ற......
ஊகங்களை மக்கள் மத்தியில்......
பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே......
உண்மையை பலமுறை சொல்லுங்கள்.....
அது சமூகத்தின் தேவைப்படுகள்.....
பொய்யை பலமுறை கூறி உண்மை.....
ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்.....!!!

இன்னும் பல சமூக அவலமுண்டு.......
அதற்கும் போராட்ட தேவையுண்டு......
தப்பான தகவல்களை பரப்பினால்......
உங்கள் உண்மையான தேவைக்கு......
சமூகம் முன் வர தயங்கும்..........
எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக.......
பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு....
சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்......!!!

நம் கையில் ஆயுதம் இருக்கிறது......
என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்.......
எப்போதும் பயன்படுத்தலாம் என்ற......
எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு......
பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை.....
பெறுவோம்...............................!!!

&
சமூக விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இது குழந்தை தொழில் இல்லையா..?
------------------------------------

பட்டாசு தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

செங்கல் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

சல்லி கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

குழந்தை 
தொழில் சட்டபடிகுற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்கவேண்டிய சட்டம்.....!!!

சினிமாவிலும் சின்ன திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தை தொழில் இல்லையா....?

உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தை தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தை தொழில் குற்றமில்லையா....?
அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....
ஏன் இன்னும் புரியவில்லை....?

புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.............
எல்லமே பணம் செய்யும் மாயை........
வயிற்று பிழைப்புக்கு போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தக கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........?
சிந்திப்போம் செயல்படுவோம்....!!!

&
விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எத்தனையோ......
கடவுளின் உருவங்கள்.....
அத்தனையையும் அழகாக.....
சிலையாக வடித்துவிட்டான்.....
மனிதன்..........!

இத்தனை கடவுளை வடித்த.......
மனிதனால் ஒரு மனிதனை......
இனங்கான முடியவில்லை.......
அவனுக்கொரு சிலையை.......
வடிக்க முடியவில்லை.......?
&
கவிநாட்டியரசர், கவிப்புயல் 
^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
சமுதாய விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னை 
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக 
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்Reply
Reply
share

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்