Skip to main content

உண்மை அனாதை ஆனது

 

உண்மையிடம்    
கேட்டேன்  ஒரு கேள்வி ...?
நல்லது எது கெட்டது எது ...?

உண்மை சொன்னது .....

வீட்டுக்குள்ளே 
செல்லும் போது செருப்பை ....
கழற்றி வைக்கிறோம் ....
செருப்பு ஒதுக்கப்படுகிறது ....

கொழுத்தும் வெய்யிலில் ....
பதைத்து துடிக்கும் போது ....
செருப்பு சொர்கமாகிறது ....!!!

நறுமணம் வீசும் போது ...
மனம் சுவைக்கிறது ...
துர்நாற்றம் வீசும்போது ...
மனம் சுழிக்கிறது ......

காற்றே இல்லாத அறைக்குள் .....
அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு ....
விட்டால் உயிர்பிழைக்கும் ...
நிலையில் துர்நாற்ற காற்று ....
சொர்க்கமாக மாறுகிறது ....!!!

நாக்கு வறண்டு உடல் சோர்ந்து ....
ஒரு துளி தண்ணீருக்கு மனம் ...
ஏங்கி கொண்டிருக்கும்போது ....
தெருவோர குட்டை தண்ணீர் ...
அமிர்தமாகிறது ......!!!

இப்போது சொல் ....
நல்லது எது கெட்டது எது ...?
உங்கள் தேவைக்கு அதிகமாக ....
கிடைக்கும்போது தான் நீங்கள் ....
நல்லது கெட்டது என்று ....
பாகுபடுத்துகிறீர்கள் ....!!!

தேவைக்கு குறைவாக இருக்கும் ...
காலத்தில் எதுவுமே கெட்டதில்லை...
உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!
கவிப்புயல் இனியவன்
அறிவின் மறு பக்கம் சிக்கலானது ....!!!
உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்-02
-----------------

உண்மையிடம்    
கேட்டேன்  ஒரு கேள்வி ...?
அறிவு எது ..? ஞானம் எது ..?

உண்மை சொன்னது .....

அறிவுக்கும் ஞானத்துக்கும் ...
எப்போதும் முரண் தொடர்தான் .....
அறிவு வளர வளர ....
அறிவை தேட தேட .....
ஞானம் காணாமல் பொய் விடும் ....
அறிவு தான் அத்தனை மன ....
குழப்பத்துக்கும் காரணம் .....!!!

அறிவுக்குள் நீங்கள் ....
மூழ்கும் போதெலாம் ஆசை ....
அதிகரித்துகொண்டே போகும் ....
துன்பத்தையும் கோபத்தையும் ...
துயரத்தையும் பெருக்கிக்கொண்டே ....
செல்லும் .....!!!

அறிவை பெருக்க பெருக்க ....
உலக பற்றுதல் கூடிகொண்டே ....
போகும் அறிவிலிருந்து தூர ....
விலகும் காலம் எப்போது ....
உன்னில் ஆரம்பிக்கிறதோ ....
அப்போதுதான் நீ ஞானத்தில் ....
அக்கறை செலுத்துவாய் .....!!!

அறிவினால் எப்போதும் நீ ...
ஒன்றை பற்றிப்பிடிப்பாய் ....
அந்த பற்று உன்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் விழுங்கிகொண்டே ...
இருக்கும் மீள் முடியாவிட்டால் ....
கடும் துன்பத்துக்குள் விழுந்து ...
விடுகிறாய் .......!!!

அறிவு நிறைந்தால் தான் ....
பெருமை என்று நினைப்பவர்கள் ....
அறிவின் மறுபக்கத்தை புரியாதவர்கள் ....
அறிவினால் கிடைக்கும் இலாபத்தை ....
மட்டும் ரசிப்பவர்கள் - அறிவின் மறு
பக்கம் சிக்கலானது ....!!!

^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் 
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
உண்மை அநாதையானது ....!!!
.......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03
^^^
குற்றவாளி கூண்டில் .....
குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் .....
கூண்டில் நிற்கிறான் ....
சட்டவாதிகள் குற்றத்தின் மேல் ....
குற்றம் சாட்டி குற்றமற்றவனை .....
குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!!

பார்வையாளராக இருந்த ....
உண்மைக்கு கோபம் வரவே .....
சட்டென்று எழுந்து - இவை ...
அனைத்தும் பொய் . எனக்கு ....
எல்லா உண்மையும் தெரியும் ....
என்று உரத்த குரலில் சொன்னது .....!!!

அதிர்ச்சியடைந்த நீதிபதி ....
மன்றத்தின் அமைதியை கெடுதீர் ...
குற்றம் சுமத்தி -உண்மையை ...
மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!!

உண்மை ....
வேலையில்லாமல் அலைந்தது ....
பட்டதாரியாகவும் இருந்தது ......
சிறு வேலையென்றாலும் கிடைக்டும்....
தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது ....
என்ன படிதிருகிறாய் நீ ....?
பட்டதாரி என்றது -உண்மை ....
உனக்கு வேலை கிடையாது போ ....
எதற்கு என்று வினாவியது உண்மை ...?

இங்கே 
படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் ....
நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ......
தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்....
சம்பளம் கூட்டி கேட்பாய் .....
அப்பாப்பா உன்னை வைத்திருந்தால் ....
என் நிம்மதி கெட்டு விடும் .....
இவனை வெளியேற்றுங்கள் ...
கட்டளையிட்டார் முதலாளி .....!!!

சட்ட துறையும் தூக்கி எறிந்து விட்டது ....
பொருளாதார துறையும் எறிந்து விட்டது ....
அப்போ உண்மை ஒரு அநாதை தானே ....!!!
^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
கவிப்புயல் இனியவன்
இருள்தான் எனக்குப்பிடிக்கும் 
+++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04

+++
வெளிச்சத்தை கண்டு ....
மயங்கி நின்றது வெளி மனசு ....!!!

சூரியன் மலரில் விழும் ...
அழகோ அழகு .....!!!
மதிய சூரிய ஒளி அழகு ....
அந்தி வானத்தில் வானவில் ...
அழகு இன்னுமொரு அழகு ....!!!

இரவு நேர சந்திர ஒளி அழகு.... 
விட்டு விட்டு மின்னும் விண் அழகு ...
இத்தனை அழகும் ஒளியே ...
அழகு - மயங்கியது வெளி மனசு ...!!!

உள் மனசு உரத்து சொன்னது ....
வெளி மனசே நான் சொல்வதை ...
சற்று கேள் நான் கூறுவதே ...
உண்மை நிச்சய உண்மை ....!!!

இருளே 
அழகு அதற்கு நிகர் ......
உலகில் எதுவுமில்லை ....
இருளுக்கு ஏற்றத்தாழ்வு ....
தெரியாது - சமத்துவத்தை ...
இருளால் தான்சொல்லமுடியும் ....
இருளுக்குள் மனிதன் நின்றாலும் ....
மரம் நின்றாலும் ஒன்துதான் ....!!!

உலகின் 
எல்லா உயிர் தோற்றமும் ....
இருளில்தான் ஆரம்மமாகும் ....
இருளில்தான் முடிகிறது ....
கருவறையும் இருட்டுதான் ....
கல்லறையும் இருட்டுத்தான் ....
விதையை சுற்றி இருக்கும் ....
ஓடு இருட்டை வழங்குவதால் ..
விதை விருட்சமாகிறது ....!!!

இருள் இருப்பதாலேயே ...
வெளிச்சம் வாழ்க்கை பெறுகிறது .....
இருள் உள்ள இடத்துக்குதான் ....
வெளிச்சத்துக்கு வேலை உண்டு ....
வாழ்க்கை பெரும் ஒன்று ...
அழகாக இருக்கும் ஆனால் ....
நிலையாக இருக்காது ....
வெளிச்சத்தின் அழகும் அதுவே ....!!!

^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!
தொடர் கவிதை 04
^
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்